ஊழியர்களின் பி.எப் தொகையை மத்திய அரசு செலுத்தும் – புதிய அறிவிப்பு வெளியீடு!!
கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்யும் வகையில் 24 மாதங்களுக்கான தொழிலாளர் மற்றும் தொழிலதிபர்களின் பங்களிப்பு பி.எப்., தொகையை மத்திய அரசு செலுத்துவதாக அறிவித்துள்ளது.
வருங்கால வாய்ப்பு நிதி:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து அவர்களின் எதிர்காலத்திற்காக ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சேமிக்கிறது. இதன் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மத்திய அரசு செலுத்தும். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா ஊரடங்கு முறை அமலில் உள்ளதால் தொழிலதிபர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
அறிக்கை:
கோவை மண்டல பி.எப்., கமிஷனர் ஜெய்வர்தன் இன்க்லே அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை புதுப்பிக்கவும், பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்கவும், தொற்றினால் இழந்த வேலைவாய்ப்பை மீட்டெடுத்து, புதிய வாய்ப்பை உருவாக்கி ஊக்கப்படுத்தவும், மத்திய அரசு ‘சுய சார்பு இந்திய வேலை வாய்ப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் பலனாக, 1000 தொழிலாளர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களாக இருந்தால் தகுதி வாய்ந்த தொழிலாளர்களின் (யுஏஎன்) எண்ணுக்கு 24 மாதங்களுக்கான தொழிலாளர் மற்றும் தொழிலதிபரின் பி.எப்., பங்களிப்பு தொகையை மத்திய அரசு செலுத்தும்.
மேலும், 1000 தொழிலார்களுக்கு மேல் இருந்தால், தகுதியான தொழிலாளர்களுக்கு பி.எப்., தொகையை அரசு ஏற்றுக் கொள்கிறது. இந்த சலுகை ரூ.15,000க்கும் குறைவான மாத ஊதியம் பெரும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இத்திட்டத்தில் பயன்பெற கடந்த 2020 அக்டோபர் 1ம் தேதி முதல், 2021 ஜூன் மாதம் 30ம் தேதி வரை தகுதி உள்ள தொழிலதிபர்கள் மற்றும் புதிய தொழிலாளர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்