மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. DA 4% உயர்வு – அரசு அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. DA 4% உயர்வு - அரசு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. DA 4% உயர்வு - அரசு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. DA 4% உயர்வு – அரசு அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அகவிலைப்படி உயர்வு

மக்களவை தேர்தல் வர இருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 50 சதவீதமாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

PF பயனர்கள் கவனத்திற்கு.. UAN எண்களை எப்படி இணைப்பது? எளிய வழிமுறைகள் இதோ!

அரசின் இந்த அறிவிப்பு மூலம் சுமார் 49.18 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைய இருக்கின்றனர். இந்த புதிய உயர்வு 2024 ஜனவரி 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. அதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 15, 014 கோடி செலவு அதிகாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து காஸ் மானியம் ரூ.200ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மானிய உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!