கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 11,000 நிதிஉதவி…மத்திய அரசின் அருமையான திட்டம் இதோ
மத்திய மற்றும் மாநில அரசுகள் குறிப்பாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மத்திய அரசு கர்ப்பிணி பெண்களுக்கு “பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா” திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கி வருகிறது. அதாவது, இத்திட்டத்தில் பிறக்கும் முதல் குழந்தைக்கு ரூ. 5,000 மற்றும் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் ரூ. 6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது.
Today Gold Rate: சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!! நகை வாங்க நல்ல வாய்ப்பு மக்களே…!!
இத்திட்டம், இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் தொடங்கப்பட்டதாகும். மேலும், இத்திட்டத்திற்கு கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், பொருளாதார பிரச்சனையால் கர்ப்ப காலத்தில் வேலைக்கு செல்ல முடியாதவர்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் சத்தான உணவு இல்லாமல் சிரமப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் https://pmmvy.wcd.gov.in/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்.


























