நாடு முழுவதும் 18 மாநிலங்களில் புதிய வகை கொரோனா தொற்று – மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியாவின் 18 மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து பரவிய புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல்:
2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று ஒரு சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவி விட்டது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் கொரோனா தொற்றின் பரவல் சற்று குறைந்து வந்தது.
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு – அண்ணா பல்கலை வெளியீடு!!
இரண்டாம் அலை:
நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் குறையத் தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு முறையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று பிரிட்டன் நகரில் கொரோனா தொற்று பாதித்த ஒருவரின் பரிசோதனையில் அவருக்கு வந்திருந்து உருமாறிய கொரோனா என்று கண்டறியப்பட்டது. உருமாறிய கொரோனா பழைய வகை கொரோனாவைக் காட்டிலும் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கண்டறியப்பட்டது.
இந்தியாவில் உறுதி:
தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழ்நிலையில் இதுவரை 10,787 நபர்களுக்கு சோதனை மேற்கொண்டதில், 771 பேருக்கு புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 18 மாநிலங்களில் உள்ளவர்களுக்கு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்