தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு – அண்ணா பல்கலை வெளியீடு!!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் தற்போது மூடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடு விதிகளை விதிக்கலாம் – மத்திய அரசு அறிவிப்பு!!
தேர்வுகள்:
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வுகள் நடக்க இருக்கிறது. அதேபோல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் செய்முறை தேர்வுகளும், செய்முறை தேர்வு பயிற்சிகளும் நடக்க இருக்கிறது.
அண்ணா பல்கலை உத்தரவு:
அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் இறுதியாண்டு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Railway Exam