340 மத்திய அரசு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு!!!
மத்திய அரசு பணிகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக திறம்பட பணியாற்றாத 340 அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு முன்கூட்டியே ஓய்வு அளித்துள்ளததாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மத்திய அரசு பணியாளர்கள்:
மத்திய அரசின் பணியாளர் துறை தெரிவித்தது படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் வரம்பு 38,02,779 ஆகும். இதில், தற்போது 31,18,956 பேர் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசு தனது பணியாளர்களை மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்கிறது.
குறைந்த கட்டண ‘ஏசி’ ரயில் பெட்டி – இந்திய ரயில்வே அறிமுகம்!!
பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலும் கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசின் குரூப் ஏ பிரிவில் 171 அதிகாரிகள் மற்றும் குருப் பி பிரிவில் 169 அதிகாரிகள் திறமையாக பணியாற்றாத காரணத்தினால் மத்திய அரசு முன்கூட்டியே ஓய்வு அளித்து உள்ளது.
TN Job “FB
Group” Join Now
புதிய நியமனம்:
பொது மக்களின் நலன் மற்றும் அரசின் தரம் கருதி திறமையற்ற மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அதிகாரிகளுக்கு முன்னதாக ஓய்வு அளிக்க சட்டத்தில் இடமுள்ளது. அதனால் தான் முன்கூட்டியே அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் ஓய்வு பெற்றவர்கள், பதவி விலகல், மரணம் மற்றும் பதவி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆயிரக்கணக்கான காலிப்பணி இடங்கள் உள்ளது. இந்த பணி இடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
Velaivaippu Seithigal 2021
To Download=> Mobile APP Download செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்