மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி – ஜூன் மாதம் செலுத்த முடிவு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு முதல் 3 மாதங்களாக அகவிலைப்படி வழங்கப்படாத காரணத்தால் 3 தவணைகளை ஒன்றாக இணைத்து ஜூலை மாதத்தில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி அறிவிப்பு:
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக பல நிறுவனங்கள் இயங்கவில்லை, நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வாங்கப்படவில்லை. இதனால் அரசுக்கு வரி வசூல் பாதிக்கப்பட்டதால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை சரி செய்யும் பொருட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4% அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான 3 மாதம் நிலுவையில் உள்ள தொகையை 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.5000 அபராதம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
இந்த அறிவிப்பின் படி ஜூலை மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு மிக பெரிய நிவாரணம் கிடைக்கும். அரசு அகவிலைப்படி 3 தவணையாக உள்ளதால் தற்போது ஒரே தவணையாக அதனை செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.