எலெக்ட்ரிக் வாகனம் வாங்க போறீங்களா? உங்களுக்கு உதவித்தொகை எவ்வளவு கிடைக்கும்?
சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரூ. 500 கோடி மதிப்பிலான மின்சாரப் போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் 2024 (EMPS-2024) என்ற ஒன்றை அமல்படுத்த உள்ளது. வாகனத்தின் விலை குறைந்தால் விற்பனை அதிகரிக்கும் என்ற நோக்கில் இத்திட்டம் அமல்படுத்த உள்ளது.
ஓய்வூதிய திட்டங்களில் SIP அமைப்பது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
இத்திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு 10,000 ரூபாய் உதவித்தொகை என 3 லட்சம் இருசக்கர வாகனங்களுக்கு உதவி வழங்குவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறிய மூன்று சக்கர வாகனங்கள் (இ-ரிக்ஷா) வாங்குவதற்கு ரூ.25,000 வரையும் பெரிய மூன்று சக்கர வாகனம் வாங்கும் போது 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























