CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – வினாத்தாள் கசிவு.. குழப்பத்தில் மாணவர்கள்!

0
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - வினாத்தாள் கசிவு.. குழப்பத்தில் மாணவர்கள்!
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - வினாத்தாள் கசிவு.. குழப்பத்தில் மாணவர்கள்!
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – வினாத்தாள் கசிவு.. குழப்பத்தில் மாணவர்கள்!

இந்தியாவில் CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வின் வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து CBSE கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

CBSE:

இந்தியாவில் 2022 – 2023 ம் கல்வியாண்டு முடிவடையவுள்ள நிலையில் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய கல்வி வாரியமான (CBSE) கடந்த 15ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வைக்கு நடத்த தொடங்கியது. அதனை தொடர்ந்து 12ம் வகுப்புகளுக்கு பிப். 24ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது.

நாடு முழுவதும் சுமார் 6,000க்கும் மேற்பட்ட மையங்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் தேர்வின் வினாத்தாள் கசிந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் வாயிலாக இது போன்ற வதந்திகள் பரவி வருகிறது.

மாநிலத்தில் புதிதாக 5000 மருத்துவர்கள் நியமனம் – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

இது குறித்து பேசிய CBSE கல்வி வாரியம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏமாற்றும் நோக்கில் இது போன்ற போலியான தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனை மாணவர்கள் நம்ப வேண்டாம். இது போன்ற போலியான தகவல்களை பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று CBSE வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!