கனரா வங்கியில் ரூ.35000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் Concurrent Auditors பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாக கனரா வங்கி விளங்குகிறது. இது கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு நகரைத் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://canarabankcsis.in/ECA/ECAHome.aspx என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த அறிவிப்பின்படி, காலியாக உள்ள வேலையின் பெயர் “Concurrent Auditors” ஆகும். இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் தேவைக்கேற்ப ஆட்கள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வாசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் – குடிநீர் வாரியத்தின் சூப்பரான அறிவிப்பு!
மேலும் இந்த பணிக்கு ஊதிய விவரம் குறித்து பேசுகையில், தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21000 முதல் அதிகபட்சமாக ரூ.35000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மெயில் ஐடி [email protected] ஆகும். இதையடுத்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம், எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2022 ஆகும்.
கனரா வங்கி ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது:
- கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள “Empanelment of Concurrent Auditors” பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
Exams Daily Mobile App Download
- அந்தப் பக்கத்தில் “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ” Submit” கிளிக் செய்யவும்.
- எதிர்கால நோக்கங்களுக்காக பதிவு படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.