சென்னை வாசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் – குடிநீர் வாரியத்தின் சூப்பரான அறிவிப்பு!
சென்னையில் பெரும்பாலும் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படும். தற்போது இதனை தடுக்க சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்கும் திட்டம்:
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் பருவமழை காலத்தில் மழை பெய்யும் போது அதை சேமித்து வைக்க போதிய தடுப்பணைகள் இல்லாததால் மழைநீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், கோடை காலத்தில் சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சேமித்து வைக்க நீர்வளத்துறை சார்பில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ரூ.434 கோடி செலவில் 15 ஏரிகள், 7 இடங்களில் தடுப்பணை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!
இதையடுத்து சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை சரி செய்ய குடிநீர் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக தற்போது பகுதி -2, மணலி பகுதிக்கு உட்பட்ட இடையஞ்சாவடி, சடையங்குப்பம் – கடப்பாக்கம், வடபெரும்பாக்கம் – தீயம்பாக்கம், மாத்தூர் பகுதிகள் மற்றும் பகுதி -14, பெருங்குடி பகுதிக்குட்பட்ட ஜல்லடியன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஆதலால் மணலி பகுதிக்கு உட்பட்ட இடையஞ்சாவடி, சடையங்குப்பம் – கடப்பாக்கம், வடபெரும்பாக்கம் – தீயம்பாக்கம் மாத்தூர் பகுதிகள் மற்றும் பெருங்குடி உள்ளிட்ட பகுதிக்கு உட்பட்ட ஜல்லடியன்பேட்டை ஆகிய பகுதிகளில் இருக்கும் பொது மக்கள் https://chennaimetrowater.tn.