பாக்கியா தான் கோபியின் மனைவியோ என சந்தேகப்படும் ராதிகா – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
ராதிகாவை தான் கோபி திருமணம் செய்ய போகிறார் என மூர்த்தி, தனம் என அனைவர்க்கும் தெரிந்துவிட்டது. இந்நிலையில் உங்களது மனைவியின் புகைப்படத்தை காட்டுங்கள் என ராதிகா கோபியிடம் கேட்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்கு ராதிகாவை வரவிடாமல் தடுக்க கோபி பல நாடகங்களை நடத்தினார். ஆனால், எதுவுமே கோபிக்கு செட்டாகவில்லை. பின்பு கண்டிப்பாக ராதிகா பிறந்தநாள் விழாவிற்கு வரும்படியாக ஆகிவிட்டது. ராதிகா வீட்டிற்கு வரும் பொது ராதிகா கண்ணில் மாட்டிவிட கூடாது என்பதற்காக மீட்டிங் இருக்கிறது என பொய் சொல்லி ரூமை பூட்டி கொண்டு உள்ளேயே இருக்கிறார். கோபி நடந்து கொள்வது அனைவருக்குமே சந்தேகத்தை வரவழைக்கிறது.
புது வீடு கட்டி குடியேறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” விஜே தீபிகா – வைரலாகும் வீடியோ!
பாக்கியாவின் கணவர் யார் என்பதை பார்க்க ராதிகாவும் ரொம்ப நேரம் காத்து கொண்டிருந்தார். ஆனால், கோபி கீழே இறங்கி வரவில்லையென்பதால் நேரமாகிவிட்டது என கூறிவிட்டு ராதிகா கிளம்புகிறார். ராதிகா வீட்டை விட்டு கிளம்பியதுமே கோபி ரூமை விட்டு வெளியே வருகிறார். ராதிகா வரும் போது மட்டும் ஏன் கோபி இவ்வாறு நடந்துகொள்கிறார் என அனைவருக்குமே சந்தேகம் வருகிறது. பின்பு, ராதிகாவை கோபி சென்று சந்திக்கிறார். எப்படியோ பிறந்தநாள் விழாவில் யார் கண்ணிலும் மாட்டாமல் தப்பித்துவிட்டோம் என கோபி மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். கோபி ராதிகாவிடம் பேசி கொண்டிருப்பதை மூர்த்தி பார்த்து விடுகிறார். இப்போது தான் மூர்த்திக்கு அனைத்துமே தெளிவாக புரிகிறது.
Exams Daily Mobile App Download
ஆனாலும், சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள மூர்த்தியும் தனமும் ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார்கள். ராதிகாவிடம் நீங்கள் திருமணம் செய்துகொள்ள போகும் கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் என கேட்கிறார். ராதிகாவும் கோபியின் புகைப்படத்தை எடுத்து மூர்த்தியிடம் காட்டுகிறார். அந்த புகைப்படத்தினை பார்த்ததும் மூர்த்திக்கும் தனத்திற்கும் தூக்கிவாரி போட்டுவிட்டது. பின்பு, கோபியிடம் சென்று மூர்த்தி பேசுகிறார். எதற்காக அப்பாவியாக இருக்கும் எங்கள் அக்காவை ஏமாற்ற வேண்டும் என கேட்கிறார். ஆனால், கோபி மூர்த்தியை வந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டு கிளம்புங்கள் என கூறிவிடுகிறார். பின்பு, ராதிகா கோபியிடம் உங்களது மனைவியின் புகைப்படத்தை காட்டுங்கள் என கோவமாக கேட்கிறார். ஒரு வேளை ராதிகாவிற்கு உண்மை தெரிந்திருக்குமோ என கோபி பயத்தில் நடுங்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.