சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – RR அணிக்கு எதிரான போட்டிக்கணிப்பு!
ஐபிஎல் 2022 சீசனின் லீக் கட்டத்தில் இன்று (மே.20) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை உறுதி செய்யும்.
போட்டிக் கணிப்பு
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 15வது சீசன் கிட்டத்தட்ட முடிவு கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் பிளே ஆப் பந்தயத்துக்கான போட்டிகள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஆளாக பிளே ஆப்களுக்கு தகுதியான ஒரே அணியாக இருக்கிறது. இதை தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் லக்னோ அணி இருக்கிறது. இப்போது 3ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி 2வது இடத்திற்கு முன்னேற வேண்டும் என்றால் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடிக்க வேண்டும்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
இந்த போட்டியின் முடிவு மற்ற லக்னோ மற்றும் குஜராத் அணிகளின் ப்ளேஆஃப் நம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், RRக்கு கிடைக்கும் வெற்றியானது முதல் 2 இடங்களுக்குள் வரும் வாய்ப்பை பெற்றுத் தரும். இப்போது நடப்பு சீசனின் பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சென்னைக்கு இந்தப் போட்டி கொஞ்சம் முன்னேறுவதற்கான வாய்ப்பைத் தவிர வேறு எதையும் தராது. இதுவரை சென்னை அணி சுமார் 13 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இது முக்கியமான போட்டியாக இல்லை என்றாலும் சென்னை அணி கண்டிப்பாக ராஜஸ்தான் அணியின் விதியை மாற்ற முயற்சிக்கும். அதனால், மீண்டும் பிளேயிங் 11 அணியில் ஒரு சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மறுபக்கத்தில், தற்போது 627 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கும் ஜோஸ் பட்லர் கடந்த சில ஆட்டங்களில் இருந்தது போல் நல்ல நிலையில் இல்லை. இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப்களுக்கு செல்லும் போது, அவர் தனது பழைய பார்மை மீண்டும் கண்டுபிடிக்க தவற மாட்டார். அதனால், மைதானத்தில் அதிரடி ஆட்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக் கணிப்பு:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.