தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசு இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
பணி மாறுதல் கலந்தாய்வு:
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இந்த நேரத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாமல் பற்றாக்குறை நிலவியது. இதனை சரி செய்ய மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடந்த 2 வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கலந்தாய்வில் பதவி உயர்வு, பணியிட மாறுதல் போன்றவை நடைபெற வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஜூன் 3ம் வாரத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு கடந்த மாதம் முதல் பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு கட்டமாக நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நிபந்தைகள் விதிக்கப்பட்டது. அதன்படி 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தற்போதைய பணியில் கட்டாயம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நிபந்தனைகளுடன் கடந்த மார்ச் மாதம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து விரைவில் அரசு இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் கலந்தாய்வு தொடர்பாக வரும் மே 25 ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அன்றைய தினம் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.