ஜூன் 3ம் வாரத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
கடந்த மாதம் முதல் கர்நாடகா மாநிலத்தில் நடந்து வந்த 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள்:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி வாரியங்களிலும் பொதுத்தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. மாணவர்களுக்கு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்த சமயங்களில் கொரோனா பரவல் உச்சம் அடைந்திருந்தது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பொதுத்தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது நடப்பு கல்வியாண்டில் கர்நாடகா மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டு, அதற்கேற்றாற்போல் தேர்வுகளும் நடத்தப்பட்டது. நேற்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் வெளியிட்டார். அதில் மொத்தம் 85.63% பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக கூறினார்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதியதாக கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் தாள்கள் மதிப்பீடு அடுத்த வாரம் முதல் தொடங்க உள்ளதாகவும், அவை முடிந்த பிறகு ஜூன் 3ம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த தேர்வு முடிவுகளை www.karresults.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்