மார்ச் 1 முதல் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
பீகாரில் ஆரம்ப பள்ளிகள் (1 முதல் 5ம் வகுப்பு வரை) மார்ச் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு தழுவிய கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவினால் ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு மார்ச் 1 முதல் தொடக்க வகுப்புகளுக்கான (1 முதல் 5ம் வகுப்பு வரை) பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாநில அரசு, மீண்டும் திறக்கப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு, அதன் பிறகு வகுப்புகளைத் தொடரலாமா? வேண்டாமா? என்ற முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – கல்வித்துறை இன்று முக்கிய ஆலோசனை!!
பீகாரில், மாநில அரசு பிப்ரவரி 04 முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு, 6 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டது. இருப்பினும், பள்ளிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்று மாநில அரசு கூறியுள்ளது. மேலும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவேளியை பின்பற்றுவது கட்டாயமாகும்.
TN Job “FB Group” Join Now
இரண்டு ஷிப்டுகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், 50 சதவீத மாணவர்கள் மட்டுமே பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது. “பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பரிசோதிக்கும்படி நாங்கள் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏதேனும் தொற்று கண்டறியப்பட்டால், பள்ளிகள் உடனடியாக மூடப்பட வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்