பாவனியை அடிக்க வரும் தாமரை, சமாதானப்படுத்தும் போட்டியாளர்கள் – கலவர பூமியாகும் பிக்பாஸ் வீடு!
பிக்பாஸ் வீட்டில் தற்போது புதுப்புது போட்டிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தினம் தினம் புதுப்புது சண்டைகளும் வெடித்து வருகிறது. அந்த வகையில் இன்று தாமரை மற்றும் பாவ்னி இருவருக்கும் இடையில் பலத்த சண்டை இருப்பது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
புது டாஸ்க்:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டது. ஆரம்பத்தில் போட்டியாளர்கள் மத்தியில் சமாதானம் மட்டுமே மேலோங்கி இருந்தது. இதனால் சுவாரஸ்யமின்றி நிகழ்ச்சி செல்வதாக ரசிகர்கள் தரப்பு தெரிவித்தது. இதனால் வார இறுதி எபிசோட்களில் வரும் உலக நாயகன் போட்டியாளர்கள் வெளிப்படையாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும், அதற்கு தான் இந்த மேடை இருக்கிறது என்றும் போட்டியாளர்களுக்கு தெரிவித்தார்.
“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் மகாவாக களமிறங்கிய அரண்மனைக்கிளி மோனிஷா – ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக வித்தியாசமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நடந்த பஞ்ச பூத டாஸ்க் மூலம் சக்தி பெற்ற போட்டியாளர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நிரூப் பெட் ரூமிற்க்கான அதிகராத்தை பெற்றுள்ளார். இதற்காக அவர் கொடுக்கும் அறிவிப்புகள் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி உள்ளது. இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவின் படி, ‘செண்பகமே செண்பகமே’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டது.
கண்ணீருடன் புனித் உடலிற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா – அழுதபடி பேட்டி!
இதற்காக இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த முறை எதிர் எதிர் குழுவில் உள்ள தாமரை மற்றும் பாவ்னிக்கு ஏதோ கருத்து மோதல் ஏற்படுகிறது. இதற்காக காரசாரமாக இருவரும் பேசிக் கொள்கின்றனர். இடையில் தாமரை, பாவ்னியை அடிப்பது போல் செல்கிறார். இதனால் பாவ்னி மிகவும் கோவப்படுகிறார். மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்வது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.