“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் மகாவாக களமிறங்கிய அரண்மனைக்கிளி மோனிஷா – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரட்சிதா மகாலட்சுமி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் அரண்மனைக்கிளி மோனிஷா நடித்து வருகிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர்:
விஜய் டிவியில் சமீபமாக பல முன்னணி சீரியல் கதாநாயகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஏற்கனவே TRPயில் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் இருந்து ரோஷினி விலக இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த ஷாக்கில் இருந்து ரசிகர்கள் மீளாமல் இருக்கும் நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மஹாலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த ரட்சிதா மகாலட்சுமி விலகி இருக்கிறார்.
கண்ணீருடன் புனித் உடலிற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா – அழுதபடி பேட்டி!
இதனையடுத்து ரக்சிதாவுக்கு பதிலாக அரண்மனைக்கிளி சீரியலில் ஜானுவாக நடித்த மோனிஷா இந்த சீரியலில் களமிறங்கி இருக்கிறார். இவர் இந்த சீரியலில் மகா காதாபாத்திரத்தில் வருவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஷாக் கொடுத்தது போல இருந்தது. இந்த சீரியலில் முன்னதாக கதாநாயகியாக நடித்த ரட்சிதா கன்னட படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருவதால் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” & “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமம் கதைக்களம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
நடிகை ரச்சிதா, நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் இருந்து அவர் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் கொஞ்ச நாட்களாகவே நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகளே பெருவாரியாக வருவதாலும், அதில் தனக்கான ஸ்கோப் இல்லை என்றும் ரட்சிதா கருதியதால் தான் அந்த சீரியலில் இருந்து அவர் விலகினார் என வதந்திகள் பரவி வருகிறது.