பாக்கியாவை வேவுபார்க்கும் எழில், மயூரியை பார்த்து நடுங்கும் கோபி – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று மயூரி 1 வாரம் இங்கயே தங்க இருக்கிறார் என்று கோபி ராதிகாவின் மூலமாக தெரிந்து கொள்ளுகிறார். பாக்கியா தினமும் ஏதேனும் காரணம் கூறி விட்டு வெளியே செல்லுவது குறித்து அவரது மாமியார் கேட்கிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று கோபி மயூரி வீட்டிற்கு வந்ததும் மிகவும் பயந்து விடுகிறார். தனது ரூமில் சென்று தனியாக புலம்புகிறார். தனது ரூமிற்கு யாரும் வர கூடாது என்றும் பாக்கியாவிடம் கூறி விட்டு சென்று விடுகிறார். அப்போது கோபிக்கு ராதிகா போன் செய்து தான் பெங்களூரு செல்ல இருப்பதாகவும், வருவதற்கு 1 வாரம் ஆகலாம் என்றும் கூறுகிறார். இதனால் உச்சகட்ட அதிர்ச்சி அடையும் கோபி தான் கண்டிப்பாக மயூரியிடம் மாட்டிக்கொள்ள போகிறோம் என்று நினைத்து கொண்டு தனது ஆஃபீசிற்கு கிளம்புகிறார்.
சுருக்கெழுத்து தேர்வர்களின் கவனத்திற்கு – தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிக்கை!
அனைவரும் கிளம்பியதும் மெதுவாக கிளம்பி வரும் கோபி தனது கார் குறித்து கேட்கிறார். மயூரி வந்ததால் அனைவரும் காரில் சென்றதாக பாக்கியா கூறுகிறார். இதனை கேட்டு கோபப்படும் கோபி தான் எப்படி தற்போது ஆபீஸ் செல்வது என்று பாக்கியாவிடம் எரிந்து விழுகிறார். பின், ஒரு வழியாக மயூரியின் கண்ணில் மாட்டாமல் சென்று விடுகிறார். அனைவரும் கிளம்பியதும் பாக்கியா வழக்கம் போலவே தனது டிரைவிங் கிளாஸ் செல்ல காரணம் கூறி விட்டு செல்ல நினைக்கிறார்.
TN Job “FB Group” Join Now
அப்போது அவரது மாமியார் தினமும் இதே நேரத்திற்க்கு ஒரு காரணம் கூறி விட்டு பாக்கியா வெளியே செல்வதால் சந்தேகித்து பாக்கியாவிடம் அது குறித்து கேட்கிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைந்து விடுகிறார். பக்கத்து கடையில் பன்னீர் வாங்க செல்வதாக கூறுகிறார். இதனை வீட்டினர் நம்ப மறுக்கின்றனர். பின், பாக்கியா சமாளித்து விட்டு செல்லுகிறார். வீட்டினர் அனைவரும் இதனை எழிலிடம் கூறுகின்றனர். எழிலும் பாக்கியாவை பின்தொடர்ந்து செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!