
ஒத்திவைக்கப்பட்ட IPL போட்டிகள் நாளை மீண்டும் தொடக்கம்.. RCB vs KKR அணிகள் மோதல்.. BCCI வெளியிட்ட முக்கிய தகவல்..!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதன் காரணமாக கடந்த 8 ஆம் தேதி IPL தொடரானது நிறுத்தப்பட்டது. மேலும், அன்றைய தினம் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்த பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதை தொடர்ந்து BCCI போர் பதற்றம் காரணமாக IPL தொடர் ஒரு வார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.
தற்போது “இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதையடுத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட IPL போட்டிகள் வரும் மே 17 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக BCCI தெரிவித்திருந்தது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட IPL போட்டிகள் நாளை (17-05-2025) மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதி கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது மத்திய அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது”.

























