ரூ.35,400/- ஊதியத்தில் BARC ஆராய்ச்சி மையத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Stipendiary Trainee, Scientific Assistant மற்றும் Technician பதவிக்கு என மொத்தமாக 266 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிவிப்பில், Stipendiary Trainee, Scientific Assistant மற்றும் Technician ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 266 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma, ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் கல்வித் தகுதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டுகள் பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
- 30.04.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் Stipendiary Trainee Category I பணிக்கு 24 வயது என்றும், Stipendiary Trainee category II பணிக்கு 22 வயது என்றும், Scientific Assistant பணிக்கு 30 வயது என்றும் Technician பணிக்கு 25 வயது என்றும் அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.35,400/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் Preliminary Test, Advanced Test மற்றும் Skill Test ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Stipendiary Trainee category I மற்றும் Scientific Assistant பணிக்கு Rs.150/-, Stipendiary Trainee category II மற்றும் Technician பணிக்கு Rs.100/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BARC விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து
30.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.