பாரதியை மறக்க சொல்லி சாந்தி சொன்ன அட்வைஸ், குழந்தைகளுடன் வேலை செய்யும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவிற்கு ஷாந்தி அட்வைஸ் ஒன்றை சொல்கிறார். பாரதி உங்களை பார்க்க வரவில்லை அவரை போய் நம்புவதை விட்டுவிட்டு நீங்க உங்க அம்மா சொல்வதை தான் செய்ய வேண்டும் என சொல்கிறார். பின் சௌந்தர்யா குழந்தைகளை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா ஷர்மிளா சொன்னதை நினைத்து வருத்தப்பட அப்போது சாந்தி வெண்பாவிற்கு அட்வைஸ் ஒன்றை செய்கிறார். நான் சொல்லுவது உங்களுக்கு கோவம் வரலாம் ஆனால் என்ன செய்வது நீங்க தான் அந்த பாரதியை நம்பி கொண்டு இருக்கீங்க ஆனால் பாரதி உங்களை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. நீங்க ஜெயிலுக்கு போனீங்களே அவருக்கு உங்க மீது பாசம் பாசம் இருந்தால் உங்களுடன் இருந்துருப்பார். அதை விடுங்கள் கேஸ் முடிந்து வந்து இருக்கீங்க ஆனால் உங்களுக்கு ஒரு போன் கூட செய்யவில்லை. நீங்க அவரை மறந்துவிட்டு உங்க அம்மா சொல்வது படி செய்தால் தான் நல்லது என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின் வெண்பா நான் சிறு வயதில் இருந்தே ஆசைப்பட்டது எல்லாம் நடந்துவிடும் நான் டாக்டர் ஆக வேண்டும் என நினைத்தேன் அதற்காக கஷ்டப்பட்டு படித்தேன் இது போல எல்லாமே என் அம்மா எனக்கு பண்ணிட்டாங்க அதனால் நான் பாரதி மேல ஆசைபட்டேன் அதை எப்படி மறக்க முடியும் என வருத்தப்பட்டு அழுகிறார். பின் பாரதி உன்னை நான் சும்மா விட்டு போக சாதாரண பெண் இல்லை என நினைக்கிறார். மறுபக்கம் கண்ணம்மா தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க அப்போது மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் வருகிறார்.
அவர் கண்ணம்மாவிடம் வெளியே படித்துக் கொண்டிருப்பது உங்களுடைய மகளா என கேட்கிறார். ஆமாம் என சொல்ல நன்றாக பேசுகிறாள் என சொல்கிறார். அவளுடன் இருக்கும் பெண் யார் என கேட்க அது சௌந்தர்யாவின் பேத்தி என கண்ணம்மா சொல்கிறார். பாரதி சார் பெண்ணா என கேட்க கண்ணம்மா ஆமாம் என சொல்கிறார். பாரதி சார் மிகவும் நல்லவர், காலையில் நடந்த பிரச்சனையில் பெண்களை மதித்து எப்படி பேசினார் என சொல்ல கண்ணம்மா அவர் நல்லவர் தான் ஆனால் 10 வருசமாக என்னை ஏன் நம்பாமல் இருக்கிறார் என தெரியவில்லை என்று நினைத்து கொள்கிறார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
பின் ஹேமா லட்சுமி சௌந்தர்யா கண்ணம்மா சாப்பிட வருகின்றனர். அப்போது சௌந்தர்யா இங்கே சாப்பாடு நன்றாக இருக்கும் என சொல்ல பாரதியை இருவரும் கூப்பிட செல்கின்றனர். லட்சுமி அம்மா வரும் வரை இங்கே இருப்பதாக சொல்ல அதை கேட்டு பாரதிக்கு கோவம் வருகிறது. பின் அவரை அழைத்து கொண்டு சாப்பிட செல்கின்றனர். அந்த நேரம் நோயாளி ஒருவர் வர பாரதி போனை கொடுத்துவிட்டு கிளம்புகிறார். அப்போது வெண்பா போன் செய்ய ஹேமா கண்ணம்மாவை பேச சொல்கிறார். பின் வெண்பா போனை கண்ணம்மா எடுத்து பேசுகிறார்.