கண்ணம்மா தான் ஹேமாவின் அம்மா, உண்மையை உளறிய சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மா தான் ஹேமாவின் அம்மா, உண்மையை உளறிய சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மா தான் ஹேமாவின் அம்மா, உண்மையை உளறிய சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மா தான் ஹேமாவின் அம்மா, உண்மையை உளறிய சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று சௌந்தர்யா ஹேமா கண்ணம்மாவின் குழந்தை தான் என்று உண்மையினை கூறி விடுகிறார். இதனால் பாரதி மிகுந்த அதிர்ச்சி அடைகிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமாவின் நிலையினை பார்த்து மிகுந்த கவலையில் இருக்கின்றனர் குடும்பத்தினர். பின், பாரதி தனது தவறை நினைத்து மிகவும் வருந்துகிறார். பாரதி தான் செய்த தவறுக்கு தனது அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். அப்போது சௌந்தர்யா மிகவும் கொந்தளிக்கிறார். பாரதியின் பிடிவாதத்தால் தான் ஹேமா இந்த நிலைக்கு ஆளானார் என்று கூறுகிறார். இதனால் கோபம் அடையும் பாரதி ஹேமா, கண்ணம்மாவை சமையல் அம்மா என்று கூறுவது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் அதன் காரணமாக தான் அமெரிக்கா அழைத்து செல்ல அத்தனை பிடிவாதமாக இருந்ததாகவும் கூறுகிறார்.

தமிழகத்தில் 3 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – இன்று முதல் தொடக்கம்!

அப்போது சௌந்தர்யா ஹேமாவின் உண்மையான அம்மா கண்ணம்மா தான் என்று கூறி விடுகிறார். இதனை கேட்டு பாரதி அதிர்கிறார். பின்பு சமாளிக்கும் நோக்கில் பெற்றால் தான் குழந்தை மீது அன்பு வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் கண்ணம்மா அப்படி ஒரு அன்பினை தான் ஹேமாவின் மீது வைத்திருக்கிறார் என்று கூறுகிறார். இதனால் பாரதியும் ஓர் அளவிற்கு சமாதானம் அடைகிறார். பின் பாரதியுடன், வெண்பா வருகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் எரிச்சல் அடைகின்றனர். பின், ஹேமாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், ஹேமா சமையல் அம்மாவை பார்த்தால் சரி ஆக வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர் கூறி விடுகிறார்.

பொதுத்துறை வங்கிகளில் Clerk வேலைவாய்ப்பு – OBC க்கு மறுப்பு?

தாங்கள் யாரும் கண்ணம்மாவை கூப்பிட செல்ல மாட்டோம் என்று வீட்டினர் அனைவரும் மறுத்து விடுகின்றனர். பாரதி தான் சென்று அழைத்திட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி விடுகின்றனர். அதனை வெண்பா தடுக்க வேண்டும் என்று நினைக்கும் போது சௌந்தர்யா நன்றாக அவரை திட்டி விடுகிறார். இறுதியில் தானே சென்று கண்ணம்மாவை அழைத்து வருவதாக பாரதி கூறி விட்டு செல்கிறார். அப்போது வெண்பாவும் கூடவே செல்லுகிறார். இதனால் கோபம் அடையும் சௌந்தர்யா வெண்பாவை திட்டி விட்டு தனக்கு எதிரிலேயே அமர சொல்லி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!