தமிழகத்தில் 3 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் ஊழியர்கள் விடுமுறையின்றி பணியில் ஈடுபட்டனர். அதனை ஈடுசெய்யும் விதமாக ரேஷன் கடைகளுக்கு 3 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
ரேஷன் கடைகள் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி 35 ஆயிரம் பேர் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரண உதவி இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். மேலும் 14 வகை மளிகை பொருட்களும் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக ரேஷன் கடைகள் மட்டும் ஊரடங்கு காலத்தில் செயல்பட்டு வந்தன.
ஆகஸ்ட் 1 வரை 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
ரேஷன் கடை ஊழியர்கள் நிவாரண உதவிகள் விநியோகம் செய்வதற்கான டோக்கன்களை வீட்டுக்கே நேரடியாக சென்று விநியோகம் செய்தனர். அதில் குறிப்பிடப்பட்டு உள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் தினசரி 200 கார்டுகளுக்கு வீதம் பொருட்கள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு தடையின்றி ஊரடங்கு காலத்தில் நிவாரண உதவிகள் கிடைக்கும் நோக்கில் வழக்கமான விடுமுறைகள் இன்றி ரேஷன் கடைகள் செயல்பட்டு வந்தன. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு இன்றி தொடர்ந்து பணியாற்றி வந்தனர். எனவே அவர்களின் விடுப்பை ஈடு செய்யும் நோக்கில் 3 நாட்கள் விடுமுறை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
சபரிமலை ஆடி மாத பூஜை – இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் வழிபட அனுமதி!
அதன்படி ஜூலை 17, 24 மற்றும் ஆகஸ்ட் 14 ஆகிய 3 தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. அதன்படி இன்று முதல் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தொடங்கி உள்ளது. இந்த 3 நாட்களும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் செயல்படாது. இதற்கிடையில் தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.