இரட்டை குழந்தை பற்றி உண்மையை தெரிந்து கொண்ட வெண்பா, குற்ற உணர்ச்சியில் சௌந்தர்யா – இன்றைய ” பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
இரட்டை குழந்தை பற்றி உண்மையை தெரிந்து கொண்ட வெண்பா, குற்ற உணர்ச்சியில் சௌந்தர்யா - இன்றைய
இரட்டை குழந்தை பற்றி உண்மையை தெரிந்து கொண்ட வெண்பா, குற்ற உணர்ச்சியில் சௌந்தர்யா - இன்றைய " பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
இரட்டை குழந்தை பற்றி உண்மையை தெரிந்து கொண்ட வெண்பா, குற்ற உணர்ச்சியில் சௌந்தர்யா – இன்றைய ” பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா மீண்டும் குழந்தைகள் பற்றி கேட்க துளசியை பார்க்க செல்கிறார். பாரதி சொன்னதை கேட்டு சந்தேகமடைந்த வெண்பா, மருத்துவமனை சென்று துளசி கண்ணம்மா பேசிக் கொள்வதை கேட்டுவிடுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், துளசி கண்ணம்மாவிடம் குழந்தையை பற்றி கேட்டதை சௌந்தர்யாவிடம் தெரிவிக்கிறார். எனக்கு மிகவும் மனசு கஷ்டமாக இருக்கிறது. இதனை வருசமாக கூட இருந்து நான் இப்படி பொய் சொல்வது குற்ற உணர்ச்சியாக உள்ளது என சொல்கிறார். அவளிடம் எதுவும் சொல்லாதே என சொல்லி போனை வைத்துவிட்டு வேணுவிடம் பேசுகிறார். நல்ல வேளை துளசியை பார்த்து பேசுவாள் என நினைத்தேன் அதான் ஏற்கனவே துளசியை பார்த்து பேசிவிட்டேன் என சொல்கிறார்.

ஒரு பொய் சொல்வதால் எவ்வளவு கஷ்டம் என வேணு சொல்ல, அப்போது பாரதி வந்து யாரிடம் பொய் சொன்னீங்க என கேட்கிறார். அதன் பின்னர் ஹேமாவிற்கும் லட்சுமிக்கும் ஒரே மாதிரி டிரஸ் பாரதி வாங்கி வருகிறார். லட்சுமி மீது இவ்வளவு பாசமா என கேட்க, பாரதி கோபத்துடன் செல்கிறார். இனிமேல் உனக்கு என்ன வாங்குனாலும் லட்சுமிக்கும் வாங்கு, உன் அப்பா வாங்கி தரவில்லை என்றால் அவனிடம் அழுது வாங்கு இதை அவனிடம் சொல்லாதே என சொல்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ – கலந்து கொள்வாரா பிரியங்கா? வெளியான தகவல்!

பின்னர் வெண்பா நமது திட்டம் அனைத்தும் அடிக்கடி ஏன் சொதப்பலில் முடியுது. பாரதி வேற அடிக்கடி சௌந்தர்யா துளசியை பார்க்கிறார் என சொன்னானே. கண்டிப்பாக ஏதாவது இருக்கும் என நினைத்து, இதை சாதாரணமாக விட கூடாது என வெண்பா நினைக்கிறார். துளசி மருத்துவமனையில் இருக்க அங்கே மீண்டும் கண்ணம்மா வருகிறார். அவரை பார்த்து துளசி அதிர்ச்சி அடைகிறார். நான் அடிக்கடி வருகிறேன் என நினைக்காத என கண்ணம்மா சொல்கிறார்.

அப்போது அங்கே வெண்பா வந்து இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்கிறார். உடனே கண்ணம்மா ஹேமா தான் என் குழந்தையாக இருக்கும் என நினைக்க தோணுது அத்தையிடம் கேட்டால் அவள் அனாதை என சொல்கிறார். அவள் உன்னோட பொண்ணு தான் என வெண்பா நினைக்கிறார். எனக்கும் ஹேமாவிற்கும் எதுவும் இல்லையென்றால் ஏன் இதெல்லாம் நடக்கிறது என துளசியிடம் கேட்கிறார். உன் அத்தை தான் இப்படி செய்வாங்க என நினைக்கிறியா என கேட்க, துளசி குழப்பத்தில் உள்ளனர்.

அத்தை சொன்னது பொய்யாக இருந்தால் எனக்கு இரட்டை குழந்தை பிறந்த அன்னைக்கே இரண்டு பேரும் பிறந்திருக்காங்க என சொல்ல, அதை கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இரட்டை குழந்தையை பார்த்து ஒரு குழந்தை அத்தை எடுத்துக் கொண்டு போய் வளர்க்கிறார். அதான் நான் நினைக்கிறன் என சொல்ல, நான் மட்டும் தான் இந்த கதையில் மாற்றம் செய்துள்ளேன் என நினைத்தால் சௌந்தர்யாவும் பண்ணிருக்காங்க போலவே என நினைக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் ஜோடியாக புது நடிகை – ஐஸ்வர்யா மாற்றம்! ரசிகர்கள் ஷாக்!

அகில் அஞ்சலிக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி வருகிறார். ஆனால் அஞ்சலி சோகத்துடன் இருக்க, உனக்கு என்ன பிரச்சனை என அகில் கேட்கிறார். அந்த ஜோஸ்யக்காரவங்க தான உன்னை இப்படி குழப்பியது என கேட்க, குழந்தைக்கு ஆபத்து எதுவும் வராமல் இருக்க வேண்டும் என அகில் கேட்கிறார். டாக்டரிடம் எல்லாம் பார்க்கிறோம் அப்போது எப்படி நம்ம பாபாவிற்கு எதுவும் ஆகும். அவங்க சொன்னது எல்லாம் பொய் என அகில் சொல்கிறார்.

பின்னர் சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு பெரிய துரோகம் செய்துவிட்டேன் என நினைத்து அழுகிறார். வேணு அவரை கூப்பிட்டதும், அவர் பயத்தில் நடுங்குகிறார். என்னாச்சு என வேணு கேட்க, நான் கண்ணம்மாவிடம் இப்படி உண்மையை மறுத்துவிட்டேன் என நினைத்து அழுகிறார். இதற்கு ஒரே வழி தான் இருக்கு, நீ கண்ணம்மாவிடம் சென்று உண்மையை சொல்லிவிடு, அவள் நீ நல்லதுக்கு தான் சொன்ன என புரிந்து கொள்வார் என சொல்கிறார். ஹேமா மீது ரத்தம் சொந்தம் தான் அவளை இப்படி நினைக்க வைத்துள்ளது என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!