அகிலை பிரிய மனமில்லாமல் கதறி அழும் அஞ்சலி, சொந்தக்காரர்கள் பற்றி கேட்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலிக்கு வளைகாப்பு முடிந்து அம்மா வீட்டில் விட்டு அகில் கிளம்ப , அஞ்சலி நான் உன்னை விட்டு இருக்கமாட்டேன் என கதறி அழுகிறார். லட்சுமி மீண்டும் சொந்தக்காரங்களை பற்றி கேக்க உடனே கண்ணம்மா கோவப்பட்டு திட்டிவிடுகிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலிக்கு வளைகாப்பு முடிந்த பின்னர் அகிலும் அஞ்சலியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நீ சந்தோசமாக இருந்த தான என அகில் அஞ்சலியிடம் கேட்கிறார். பின்னர் அஞ்சலியின் அம்மா டீ கொண்டுவருகிறார். அப்போது அகில், கண்ணம்மா பாரதியின் திருமண போட்டோவை பார்க்கிறார். இது இங்கே இன்னும் இருக்கா என கேட்க ஆமாம் இருக்கிறது. நிகழ்ச்சி அப்போ மாட்டிருந்தா டாக்டர் தம்பி சண்டைபோடுவார்கள் என மாட்டவில்லை என அஞ்சலி அப்பா சொல்கிறார்.
பின்னர் அகில் நான் கிளம்புகிறேன் என சொல்ல, அஞ்சலி அப்போ நான் என கேட்கிறார். இது தலை பிரசவம் வளைகாப்பு முடிந்த பின்னர் நீ இங்கே தான் இருக்க வேண்டும் என அஞ்சலியின் அம்மா சொல்ல, என்னை விட்டு போகாத அகில், உன்னை பிரிந்து என்னால் இருக்க முடியாது என சொல்லி கதறி அழுகிறார். வீடு இங்கே தான இருக்கு கார் எடுத்தால் 20 நிமிடத்தில் வந்துவிடுவேன் என அகில் சொல்ல, நான் இருக்க மாட்டேன் என அழுகிறார்.
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம் வழங்க முடிவு – அமைச்சரின் புதிய தகவல்!
அஞ்சலி மனதிற்குள் நான் சிறிது நாள் தான் உயிருடன் இருக்க போகிக்கிறேன் அதுவரை நான் உன்னோடு தான் இருக்க வேண்டும் என நினைத்து பார்க்கிறார். வேணுவும் சௌந்தர்யாவும் பேசிக் கொண்டிருக்க, என்ன கண்ணம்மாவிடம் இவ்வளவு பொய் சொல்கிறாய் என கேட்கிறார். நான் நினைத்த அளவு இல்லை கண்ணம்மா கொஞ்சம் கேள்வி தான் கேட்டார். அதுக்கு நான் பதில் சொல்வதற்குள் எனக்கு மனசெல்லாம் பட படவென அடிச்சது என சொல்கிறார்.
அப்போது அகில் அஞ்சலி அங்கே வர, அஞ்சலியை ஏன் கூட்டிக் கொண்டு வந்த என கேட்கிறார். அவள் அங்கே இருக்க மாட்டேன் என ஒரே அழுகை என சொல்ல, அஞ்சலியின் அம்மா அப்பா எதுவும் சொல்லவில்லை தான என சொல்கிறார். அப்போது பாரதி அங்கே வர எதற்கு அந்த சமையல் அம்மாவை வர செய்து வெண்பாவை திட்டமிட்டு அவமானம் செய்து அனுப்புறிங்க அவ என்னோட பெஸ்ட் பிரண்ட் அவளை அவமானம் செய்து என்னை அசிங்கப்படுத்துறீங்க என சொல்கிறார். உடனே அகில் நீயும் அவளும் புருஷன் பொண்டாடி போல நடிச்சது அசிங்கமா இல்லை நாங்க உண்மையா சொன்னது அசிங்கமா என கேட்கிறார்.
நயன்தாரா திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலக முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!
வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருந்த அவ நல்லவள் நான் கெட்டவனா என பாரதி கேட்க சௌந்தர்யா கோபப்படுகிறார். மறுபக்கம் லட்சுமி கண்ணம்மாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அஞ்சலி ஆன்டி வயிற்றில் குட்டி பாப்பா இருக்க அம்மா என கேட்க ஆமாம் நீயும் என் வயிற்றில் அப்படி தான் இருந்த என கண்ணம்மா சொல்கிறார். அப்போ உனக்கும் வளைகாப்பு செய்தார்களா, அதற்கு யாரெல்லாம் வந்தார்கள் என கேட்க கண்ணம்மா கோவப்பட்டு லட்சுமியை திட்டிவிடுகிறார்.
உடனே லட்சுமி அழ தொடங்க, கண்ணம்மா மன்னிப்பு கேட்கிறார். கண்ணம்மா லட்சுமி நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார். உடனே கண்ணம்மா இப்படி இவள் வருத்தப்படுவாள் என தெரிந்தால் என் சுயமரியாதையை விட்டுவிட்டு நான் எப்போதோ அவருடன் சேர்ந்து இருந்து இருப்பேன் என நினைத்து பார்க்கிறார். பின்னர் அஞ்சலியும் அகிலும் பிறக்க போகும் குழந்தையை நினைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அஞ்சலி அப்போது நான் இருக்க மாட்டேன் என நினைத்து வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.