நயன்தாரா திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலக முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் நடிக்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா:
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா. 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். பல ஆண்டுகளாக சினிமா துறையில் மார்க்கெட் குறையாத ஒரே நடிகையாக இவர் இருக்கிறார். அதனால் தான் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை லேடி சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.
பூவே பூச்சூடவா சீரியல் ஹீரோ சிவாவின் மூன்றாம் ஆண்டு திருமண நாள் – ரசிகர்கள் வாழ்த்து!
‘தலைவர்’, ‘தல’, ‘தளபதி’ என நாயகர்களின் ஆதிக்கம் அதிகமுள்ள தமிழ் சினிமாவில் கடந்த ஆறு ஏழு ஆண்டுகள் முன்னணி நாயகியாகவும், பல நாயகர்களுக்கு இணையான மார்க்கெட் உடையவராகவும் விளங்குபவர். தற்போது அவர் நாயகிகளை மையமாக கொண்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் 5 ஆண்டுகளாக காதலில் இருக்கிறார். அவர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் இன்று காலமானார் – திரைத்துறையினர் இரங்கல்!
இந்நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற போவதாக புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அது குறித்து தெளிவான விளக்கத்தை வழங்கி உள்ளார். தற்போது அவர் திருமணத்திற்கு பின்னர் நடிக்க மாட்டார் எனவும், முழுவதுமாக திருமணம் முடிந்த பின்னர் குடும்ப வாழ்க்கை பார்க்க உள்ளதாகவும், பின்னாளில் படங்களை தயாரிப்பது, இயக்குவது என செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.