பேச்சுப் போட்டியில் பரிசு வாங்கும் ஹேமா, பாரதி கண்ணம்மாவை மேடையில் அழைத்து மரியாதை – இன்றைய எபிசோட்!

0
பேச்சுப் போட்டியில் பரிசு வாங்கும் ஹேமா, பாரதி கண்ணம்மாவை மேடையில் அழைத்து மரியாதை - இன்றைய எபிசோட்!
பேச்சுப் போட்டியில் பரிசு வாங்கும் ஹேமா, பாரதி கண்ணம்மாவை மேடையில் அழைத்து மரியாதை - இன்றைய எபிசோட்!
பேச்சுப் போட்டியில் பரிசு வாங்கும் ஹேமா, பாரதி கண்ணம்மாவை மேடையில் அழைத்து மரியாதை – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா பேச்சு போட்டியில் பரிசு வாங்கும் நிகழ்ச்சிக்கு கண்ணம்மா சௌந்தர்யா பாரதி என அனைவரும் வருகின்றனர். சிறப்பு விருந்தினராக விக்ரம் வருகிறார். மறுபக்கம் வெண்பாவிற்கு ஷர்மிளா இன்னொரு மாப்பிள்ளை பார்க்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவிற்கு பார்த்த மாப்பிள்ளை எல்லாம் ஓட விட்டதை தெரிந்து கொண்டு ஷர்மிளா கேள்வி கேட்கிறார். அப்போது வெண்பா அவர்களுக்கு பொண்ணு பிடிக்கவில்லை என்றால் இப்படி எல்லாம் பொய் சொல்வார்களா என நடிப்பை காட்டுகிறார். வெண்பாவின் உண்மையான குணத்தை தெரிந்து கொண்ட ஷர்மிளாவிற்கு என்ன பேசுவது என தெரியாமல் இருக்கிறது. அப்பொது இனிமேல் நீங்க மாப்பிள்ளை பார்த்து அசிங்கப்பட வேண்டாம் இனி எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல, இன்னைக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன் நீ பார்க்க போக வேண்டும் என ஷர்மிளா சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

வெண்பா அதை கேட்டு அதிர்ச்சி அடைய கண்டிப்பாக போக வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் ஹேமா ஸ்கூலில் பரிசு கொடுக்க நிகழ்ச்சி ஏற்பாடு நடக்கிறது. அப்போது லட்சுமி வர ஹேமாவிற்கு வாழ்த்துக்களை சொல்கிறார். அப்போது சமையல் அம்மா வரவில்லையா என கேட்க, ஐயோ நான் மறந்துவிட்டேன் என ஹேமா சொல்கிறார். அப்போது லட்சுமி நீ சொல்லாமல் இருந்தால் என்ன நான் சொல்லிவிட்டேன் என சொல்கிறார். அந்த நேரம் கண்ணம்மாவும் வருகிறார். அப்போது ஹேமா கண்ணம்மாவை கூப்பிடத்தை நினைத்து அழ அதான் உன் அக்கா லட்சுமி கூப்பிட்டாள் என கண்ணம்மா சொல்கிறார்.

அப்போது ஹேமா சமையல் அம்மாவும் இப்படி சொல்கிறார் அப்போ அப்பாவை திருமணம் செய்ய சம்மதம் போல என நினைக்கிறார். பின் சௌந்தர்யா வர கண்ணம்மா ஹேமா அப்பா வருவாரா என கேட்கிறார். ஹேமாவிடம் தான் கேட்க வேண்டும் என நினைத்து ஹேமாவிடம் கேட்க, ஹேமா அப்பா வரேன் என சொன்னதாக சொல்கிறார். பின் நிகழ்ச்சி தொடங்க வேணு சௌந்தர்யா அகில் என அனைவரும் வந்திருக்கின்றனர். கண்ணம்மா லட்சுமி அமர சிறப்பு விருந்தினராக விக்ரம் வருகிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? ஜூலை முதல் அமல்! ஜாக்பாட் அறிவிப்பு!

சௌந்தர்யா அவரை பார்த்து அதிர்ச்சி அடைய பின் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது. அந்த நேரம் பாரதி வர கண்ணம்மா அருகே அமருகிறார். நிகழ்ச்சி தொடங்கியதும் பேச்சு போட்டியில் முதல் பரிசு ஹேமாவிற்கு கிடைத்துள்ளதாக சொல்கிறார். பின் ஹேமா மேடைக்கு வந்து பாரதி பற்றி பேசுகிறார். என்னுடைய அப்பா பெரிய டாக்டர் என பேச தொடங்க லட்சுமி நான் பேசி இருந்தால் எப்படி இருக்கும் என்பது போல நினைத்து பார்க்கிறார். பின் ஹேமா பாரதியை மேடைக்கு அழைக்க பாரதி சந்தோசமாக போகிறார்.

எனக்கு அம்மா இல்லாத குறை தெரியாமல் என்னுடைய அப்பா என்னை வளர்த்தார் ஆனால் இங்கே ஸ்கூலில் மற்ற பசங்களின் அம்மா சாப்பாடு கொண்டு வரும் போது எனக்கும் அம்மா நியாபகம் வரும் அப்போது சமையல் அம்மா தான் என்னை பெற்ற அம்மா போல பார்த்து கொள்வார். அதான் நம்ம லக்ஷ்மியின் அம்மா அவரையும் மேடைக்கு வந்து எனக்கு பரிசு வழங்க வேண்டும் என ஹேமா சொல்ல,பாரதிக்கு கோவமாக வருகிறது. பின் கண்ணம்மாவும் பாரதியும் மேடைக்கு வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!