கண்ணம்மாவால் உயிர் பிழைக்கும் குழந்தை – அதிரடி திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’! ப்ரோமோ ரிலீஸ்!
ஹெலிகாப்டரில் குழந்தையின் இதயத்தை சென்னைக்கு கொண்டு செல்லும் நேரத்தில் மழை வந்து பாழாக்குகிறது. இந்நிலையில் கண்ணம்மா தான் உடனடியாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றுவது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது ஒரு குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக கண்ணம்மாவும் பாரதியும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதாவது விழுப்புரத்தில் இருந்து இதயத்தை சென்னைக்கு கொண்டு செல்ல ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருக்கிறது. இருதயத்தை கொண்டு செல்வதற்காகவே ஒரு தனி அதிகாரியாக கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
TCS, Infosys & HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH? முழு விவரம் இதோ!
ஆரம்பத்திலிருந்தே கண்ணம்மா ஐடியா சொல்லும் போதெல்லாம் கணேசன் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். இதயத்தை குறிப்பிட்ட சில மணி நேரத்திற்குள் அந்த குழந்தையின் உடலில் செலுத்தினால் மட்டுமே அந்தக் குழந்தையால் உயிர் பிழைக்க முடியும். ஆனால் இந்த அதிகாரிகள் எந்தவித பரபரப்பும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனை கண்ணம்மா அறிந்துகொண்டு மற்றொரு ஏற்பாடு செய்கிறார். கண்ணம்மா நினைத்தபடியே கனமழையால் ஹெலிகாப்டரில் இதயத்தை கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்படுகிறது.
Exams Daily Mobile App Download
இதனால் மருத்துவர்கள் அனைவரும் எப்படி ஒன்றரை மணிநேரத்திற்குள் குழந்தையின் இதயத்தை கொண்டு செல்ல முடியும் என பரபரப்பாக இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணம்மா குழந்தையின் இதயத்தை சென்னைக்கு கொண்டு செல்ல ஒரு ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கும் கணேசன் ஒன்றரை மணி நேரத்தில் எப்படி கொண்டு செல்ல முடியும் எனக் கூறுகிறார். சரியான நேரத்தில் குழந்தையின் இதயத்தை கொண்டு செல்வார்களா, சிகிச்சை வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.