தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – மே 19 வரையிலான வானிலை நிலவரம்!
வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் லேசான மழை பொழிவு இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கனமழை:
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெப்பச்சலனம் அதிகமாக இருந்து வருகிறது. கூடுதல் வெப்பச்சலனம் காரணமாக ஒவ்வொரு இடங்களில் லேசான மழை பொழிவும் இருந்து வருகிறது. மேலும், சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. கூடுதல் வெப்பச் சலனத்தின் காரணமாக பயிர் விளைச்சலும் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது சில பகுதிகளில் மழை பொழிவு இருந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
TCS, Infosys & HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் மட்டுமே இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த 8 மாவட்டங்களிலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த மாவட்டங்களை தொடர்ந்து சில மாவட்டங்களில் லேசான மழை பொழிவு இருக்கும் எனவும், ஓரிரு இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மேற்குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மே 18ஆம் தேதி வரைக்கும் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து கனமழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூடுதல் வெப்பத்திற்கு ஏற்ப மழை பொழியும் இருந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.