
வங்கிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்…!! அரசு விடுமுறை ரத்து…!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி தகவல்…!
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இன்று அரசு விடுமுறை ஆகும். ஆனால், வங்கிகளுக்கு இன்று 2024 -2025 ஆம் நிதியாண்டிற்கான இறுதி நாள் (மார்ச் 31, 2025) என்பதால், ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, 2024 -2025 ஆம் நிதியாண்டின் இறுதி நாள் என்பதால், புதிய கணக்குகளை தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள, இன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவித்துள்ளது.
மேலும், அரசின் வருவாய் மற்றும் செலவு பணிகளை மேற்கொள்ளும் வங்கிகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை கிடையாது என குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, வங்கிகளில் மார்ச் 31 ஆம் தேதியிட்ட காசோலைகள் முழுவதும் இன்று கிளியர் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், வங்கிகளில் 2024 -2025 ஆம் நிதியாண்டின் அரசு வருவாய் மற்றும் செலவினங்களை கணக்கிட CTS முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அரசுக்கு செலுத்தவேண்டிய வரி மற்றும் கட்டணங்களை இன்றைய தினம் செலுத்தலாம் என்றும், இதர பொது வங்கிகளின் சேவைகள் இன்று செயல்படாது என்றும் அறிவித்துள்ளது.

























