வங்கியில் ‘இந்த’ பணியை இன்னும் முடிக்க வில்லையா? – கணக்கை முடக்கும் அபாயம்!

0
வங்கியில் ‘இந்த’ பணியை இன்னும் முடிக்க வில்லையா? – கணக்கை முடக்கும் அபாயம்!

வங்கியின் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் சில பணிகளை முடிக்காத பட்சத்தில் அவர்களுக்கான வங்கி கணக்குகள் முடக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு:

வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவ்வப்போது வங்கி வெளியிட்டு வரும் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். வங்கி பணப்பரிவர்த்தனை தொடர்பான மற்றும் புதிய விதிமுறைகளை அவ்வப்போது வங்கிகள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் கேஒய்சி சரிபார்ப்பை டிசம்பர் 18ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% அதிகரிப்பு – அறிவிப்பு வெளியீடு!!

குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்காத பட்சத்தில் வாடிக்கையாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி சரிபார்ப்பு பணிக்கு அடையாள சான்று, முகவரி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் கார்டு, வருமானச் சான்று, கைபேசி எண் போன்ற ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். கேஒய்சி சரிபார்ப்பு படிவத்தை நிரப்பி ஆவணங்களுடன் சமர்ப்பிக்கும் பட்சத்தில் கேஒய்சி சரிபார்ப்பு முடிக்கப்பட்டு விடும். இப்பணியை இதுவரை முடிக்காத வாடிக்கையாளர்கள் உடனடியாக முடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!