தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பொது இடங்களிலும் மக்கள் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொண்டாட்டங்களுக்கு தடை:
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தொற்று தீவிரமெடுத்து வருகிறது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர்க்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுகும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் பொது மக்கள் மத்தியில் தொற்று பரவும் அச்சம் அதிகரித்துள்ளது. டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அம்மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – பொங்கல் போனஸ் அறிவிப்பு!
மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் ஓமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகிறது. அந்த வகையில் விரைவில் தடுப்பூசிகளை செலுத்த அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும் இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. இதில் ஓமிக்ரான் தடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசிக்கபடவுள்ளனர்.
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றுக்கு முதல் பலி – வேகமெடுக்கும் பாதிப்பு! பொதுமக்கள் அச்சம்!
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு பண்டிகைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. ஓமிக்ரான் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைகளில் கூடுவதற்கு அம்மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அனைத்து பொது இடங்களிலும் மக்கள் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.