ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஆர்யன் – ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக பிரபலமான ஆர்யன் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆர்யனின் ரீசென்ட் புகைப்படம் ஒன்று சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரின் மூலமாக அறிமுகமானவர் தான் ஆர்யன். இவர் இந்த தொடரில் செழியன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். ஆர்யன் பாக்கியலட்சுமி தொடரில் அறிமுகமான பிறகு பல லட்சக்கணக்கில் ரசிகர் கூட்டத்தை சம்பாரித்தார். பின்பு ஆர்யன் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் ஷபானாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அமீரை எனக்கு மிகவும் பிடிக்கும், காதலை சொல்ல கொஞ்ச நாள் தேவைப்படும் – பாவனி ஓபன் டாக்!
திருமணம் முடித்த கையோடு ஆர்யனும் ஷபானாவும் எளிமையாக தேனிலவையும் கொண்டாடினர். தேனிலவின் போதே இருவருக்கும் ஏதோ ஒரு கருத்து வேறுபாடு நிலவி இருவரும் பிரிய போவதாக வதந்திகள் பரவியது. பின்பு, ஆர்யனும் ஷபானாவும் சேர்ந்து இருக்கும்படியான புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கு இடையே ஆர்யன் திடீரென பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.
Exams Daily Mobile App Download
எதற்காக ஆர்யன் சீரியலில் இருந்து விலகினார். ஒரு வேளை பட வாய்ப்பிற்காக சீரியலில் இருந்து விலகியிருப்பாரோ என கேள்விகள் வந்தது. பின்பு ஆர்யன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த சீரியலுக்காக புதுவித கெட்டப்புடன் தாடி மீசையுடன் ஆர்யன் இருக்கும்படியான புகைப்படங்கள் சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது. ஆர்யனா இது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.