“பாக்கியலட்சுமி” சீரியலில் நடித்ததற்கு பலர் கேலி செய்தனர் – புது செழியன் விகாஷ் ஓபன் டாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தற்போது புதிய செழியனாக களமிறங்கி இருக்கும் நடிகர் விகாஷ் சம்பத் தன்னுடைய சினிமா பயணம் குறித்தும், பாக்கியலட்சுமியில் தன்னுடைய என்ட்ரியால் ரசிகர்கள் கொடுத்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடி திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. கோபி மீது சந்தேகம் வந்தாலும் அவர் மீது வைத்துள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையால் அவரை நம்புகிறார். இப்படி இருக்க ராதிகா உடன் கோபி நெருக்கமாக பழகுகிறார். இனிமேல் கோபி இல்லாமல் ராதிகாவால் இருக்க முடியாது என்ற நிலைமை இருக்கிறது. மேலும் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்தாலும் பாக்கியா தன்னுடைய பொறுப்புகளில் இருந்து நீங்காமல் இருக்கிறார்.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் ஆலியாவுக்கு பதில் அறிமுகமாகும் புதிய நடிகை – ரசிகர்கள் குழப்பம்!
இந்நிலையில் சமீபத்தில் செழியன் கதாபாத்திரம் மாற்றப்பட்டது. செழியனாக நடித்து வந்த ஆர்யன் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது விகாஷ் சம்பத் நடித்து வருகிறார். அவர் ஐடி துறையில் இருந்து சினிமா பயணத்திற்கு எப்படி வந்தார் என்பது பற்றி மனம் உருகி ஒரு பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். அதில் அவர் நல்ல சம்பளத்துடன் ஐடியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது நடிப்பு துறையில் உள்ள ஆர்வத்தால் அந்த வேலையை விட்டு கஷ்டப்பட்டு அவர் முதலில் விஜே ஆனாராம். ஆனால் தன்னுடைய முதல் வாய்ப்பில் பல அவமானங்களை அவர் சந்தித்தாராம்.
துளசியின் கணவர் தான் வருணா? பாரதி கண்ணம்மாவில் அடுத்த ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமியில் வாய்ப்பு கிடைத்ததால் முதலில் ஆர்யன் தான் அவருக்கு வாழ்த்துக்களை கொடுத்தாராம். அதன் பின் அவர் நடிக்கும் போது உடல் பருமனாக இருப்பதால் பலர் கேலி செய்ததாக சொல்கிறார். ஆனால் அது படத்திற்காக தான் உடல் எடையை அதிகரித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஆனால் இப்போது என் உடல் எடையை குறைத்து இருப்பதாக சொல்லி இருக்கிறார். பின் அவர் விஜே வாக இருந்து அதன் பின் நடிகராக பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் பற்றி சொல்லி இருக்கிறார். என்னுடைய அண்ணன் தான் எனக்கு துணையாக இருந்ததாக அவர் சொல்லி இருக்கிறார்.