துளசியின் கணவர் தான் வருணா? பாரதி கண்ணம்மாவில் அடுத்த ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் லட்சுமி அப்பாவை தேடி அலைய பாரதி இன்னும் மனம் மாறாமல் இருக்கிறார். இந்நிலையில் அடுத்து வர இருக்கும் எபிசோடுகளில் வருண் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரை லட்சுமி அப்பாவை தேடி அலைவதும், பாரதி கண்ணம்மாவை அவமானப்படுத்துவதும் என கதை கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இனி வரும் எபிசோடுகளில் கதை அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லட்சுமி தனது அப்பாவை தானே கண்டுபிடிப்பேன் என சொல்லி எல்லாரிடமும் உதவி கேட்கிறார். சௌந்தர்யா லட்சுமியை நினைத்து வருத்தப்பட மறுபக்கம் ஹேமா தனது அப்பாவிற்கு நல்ல துணை வேண்டும் என நினைக்கிறார்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வருண் – ரசிகர்கள் அதிர்ச்சி!
பாரதி கண்ணம்மா மீது ஒரு பக்கம் கோவமாக இருந்தாலும் அடிக்கடி அவர் வைத்துள்ள பாசம் வெளியே வருகிறது. மறுபக்கம் பாரதிக்கும் வெண்பாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது. மேலும் வெண்பா செய்த எல்லாத்தையும் மாயாண்டி தெரிந்து கொண்டு அதை வீடியோவாக எடுத்து வைத்து வெண்பாவை மிரட்டி வருகிறார். பாரதி திருடனிடம் சிக்க அவரது உயிரை தன்னுடைய உயிரை கொடுத்து கண்ணம்மா காப்பாற்றுகிறார். இப்படி அடிக்கடி ஒரே காட்சிகள் வருவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர்.
ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா செல்வி, வசமாக மாட்டிக் கொண்ட கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
மேலும் கதை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது அடுத்த வார எபிசோட் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் வருணை பாரதி ஹோட்டல் ஒன்றில் சந்திக்கிறார். அங்கே அவர் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என சண்டை போட அப்போது துளசி வருகிறார். ஏன் இவரிடம் சண்டை போடுறீங்க என கேட்கிறார். இவன் தான் என் வாழ்க்கையை கெடுத்தவன் என பாரதி சொல்ல, இவர் என்னுடைய கணவர் என துளசி சொல்ல போகிறார். அதனால் கதையில் பெரிய திருப்பம் வரப் போகிறது.