![ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா செல்வி, வசமாக மாட்டிக் ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா செல்வி, வசமாக மாட்டிக் கொண்ட கோபி - இன்றைய](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/03/ராதிகா-வீட்டிற்கு-வந்த-பாக்கியா-செல்வி-வசமாக-மாட்டிக்.jpg)
ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா செல்வி, வசமாக மாட்டிக் கொண்ட கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா வீட்டில் கோபி இருக்கும் போது செல்வியும் பாக்கியாவும் வருகின்றனர். பின் கோபியின் கார் அங்கே இருப்பதை பார்த்து பாக்கியா சந்தேகப்படுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா வீட்டில் இருக்கும் போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கிறது. அப்போது கோபி கதவை திறக்க வர அந்த நேரம் சரியாக போன் அடிக்கிறது. அதனால் அவர் கதவை திறக்காமல் ராதிகா கதவை திறக்கிறார். அப்போது ராதிகா வாங்க டீச்சர் என சொல்ல, கோபி அதை கேட்டு பதட்டம் அடைகிறார். ராதிகா அவரை உள்ளே வர சொல்ல, கோபி அப்படியே வேற ரூமிற்குள் செல்கிறார். ஒரு ஆள் உள்ளே போனதை செல்வி சந்தேகத்துடன் பார்க்கிறார். பின் பாக்கியா உங்க வீட்டிற்கு வந்து எத்தனை நாள் ஆகிவிட்டது என சொல்கிறார்.
கோபி ரூமிற்குள் மாட்டிக் கொண்டதை நினைத்து பதட்டமாக இருக்கிறார். அப்போது அவர் அங்கே இருந்த பொருள் ஒன்றை தட்டிவிட சத்தம் கேட்கிறது. அப்போது பாக்கியாவிடம் ராதிகா என் நண்பர் தான் உள்ளே இருப்பதாக சொல்ல, நான் உங்களிடம் சொல்லி இருந்தேனே அவர் தான் என சொல்கிறார். பின் ராதிகா அவரை கூப்பிட செல்ல, பாக்கியாவிடம் செல்வி என்ன இது ஒரு ஆம்பளை உள்ளே இருக்கிறார் என கேட்கிறார். அவரை பற்றி தான் சொல்லி இருக்காரே அப்பறம் என்ன என பாக்கியா சொல்ல, ராதிகா கோபியை கூப்பிட வருகிறார்.
ஆனால் கோபி போன் பேசுவது போல நடிக்க, முக்கியமான போன் பேசிக் கொண்டிருக்கிறேன் என கோபி சொல்கிறார். அப்போது பாக்கியாவிடம் செல்வி நடப்பது எதுவும் சரி இல்லை என சொல்ல, கோபி இல்லாமல் ராதிகா மட்டும் வருகிறார். அவருக்கு முக்கியமான போன் வந்துள்ளது என சொல்ல, பாக்கியா பேசிவிட்டு கிளம்புகிறார். வெளியே வந்து பார்த்த போது அங்கே கோபியின் கார் நிற்கிறது. அதை பார்த்து செல்வி இது சார் கார் தான என சொல்ல, அவர் அலுவலகம் போயிருப்பதாக தான சொன்னார் என சொல்கிறார்.
வெண்பாவை மிரட்டி பணம் கேட்கும் மாயாண்டி, அப்பா பற்றி பாரதியிடம் கேட்க வந்த லட்சுமி – இன்றைய எபிசோட்!
ஒரு வேலை ராதிகா சொன்ன நண்பர் சாராக இருக்குமா என கேட்க, அப்படி எல்லாம் இருக்காது என சொல்கிறார், குடும்பத்தை விட்டு அவர் திருமணம் செய்வாரா என்ன பேசுகிறாய் நீ என கேட்கிறார். அப்போ சாருக்கு போன் செய்து பார் என சொல்ல, பாக்கியா போன் செய்கிறாள் ஆனால் கோபி போனை எடுக்காமல் இருக்கிறார். இனியா அப்பாவை இப்படி எல்லாம் பேசாதே என பாக்கியா சொல்ல, அவர் செய்தாலும் செய்வார் என செல்வி சொல்கிறார். உடனே கோவப்பட்ட பாக்கியா செல்வியை விட்டு விட்டு அங்கிருந்து செல்கிறார்.