விபத்தில் சிக்கிய ராதிகா, உதவிக்கு கோபியை அழைத்த மயூரா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
விபத்தில் சிக்கிய ராதிகா, உதவிக்கு கோபியை அழைத்த மயூரா - இன்றைய
விபத்தில் சிக்கிய ராதிகா, உதவிக்கு கோபியை அழைத்த மயூரா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
விபத்தில் சிக்கிய ராதிகா, உதவிக்கு கோபியை அழைத்த மயூரா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவை நினைத்து கோபி வருத்தமாக இருக்கிறார். பாக்கியாவின் தொழில் வளர்ச்சியை பார்த்து பத்திரிகையில் இருந்து இன்டர்வியூ எடுக்கின்றனர். ராதிகாவிற்கு விபத்து ஏற்பட கோபி உதவி செய்ய போகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி’ சீரியலில், பாக்கியா புதிதாக அலுவலகத்தை திறக்கும் போது யாரவது சிறப்பு விருந்தினரை அழைக்க வேண்டும் என சொல்கிறார். அப்போது இனியா வந்து பார்க்க என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்கிறார். நம்ம புதிய கம்பெனி தொடங்குவது பற்றி பேசிக் கொண்டிருக்கோம் என சொல்ல, ஒரு இடம் பாத்துருக்கீங்க அவ்வளவு தான என கேட்கிறார். இல்லை அது தான் நம்ம புதிய கம்பெனி என சொல்கிறார். நீ எழுதுன கட்டுரையை தேர்ந்தெடுத்து இருக்காங்க என சொல்ல, இனியா அதெல்லாம் தேர்வு செய்யமாட்டார்கள் என சொல்கிறார்.

பின் பாக்கியா வீட்டிற்கு இருவர் வர ஈஸ்வரி எதோ மசாலா வாங்க வந்திருப்பதாக நினைக்கிறார். பாக்கியாவை அழைத்து சொல்ல, உங்க வீடியோ பிரபலமாகிவிட்டது. அதனால் எங்க பத்திரிகையில் சுயதொழில் செய்து முன்னேறியது குறித்து பேட்டி எடுக்க வேண்டும் என கேட்கிறார். அதை கேட்டு பாக்கியா சந்தோசப்பட மாலை வாங்க எடுக்கலாம் என சொல்கிறார். பின் கோபி ராதிகாவை நினைத்து வருத்தமாக இருக்க, அவருக்கு போன் செய்கிறார். அப்போது அவர் அப்பா சொன்னது ஞாபகத்திற்கு வர, அவர் போனை வைத்துவிடுகிறார்.

குடும்பத்தினருக்கு சாப்பாடு செய்து அசத்தும் ஐஸ்வர்யா, மூர்த்தி முன் நிற்க வருத்தப்படும் கண்ணன் – இன்றைய எபிசோட்!

ராதிகாவை ஒரு வண்டி வந்து இடித்துவிட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்துவிடுகின்றனர். பின் ராதிகா அம்மா வெளியே கடைக்கு செல்ல, மருத்துவமனையில் இருந்து மயூராவிற்கு போன் செய்கின்றனர். உங்க வீட்டில் பெரியவர் யாரும் இல்லையா என கேட்க, இல்லை அம்மாவிற்கு போன் பண்ணுங்க என கேட்கிறார். அம்மாவிற்கு விபத்து ஏற்பட்டு விட்டது. வீட்டில் பெரியவர் வந்தால் இந்த நம்பருக்கு போன் செய் என சொல்கிறார். மயூரா என்ன செய்வது என தெரியாமல் இருக்க பாட்டி போனை எடுக்காமல் இருக்கிறார். மயூரா அழுது கொண்டே கோபிக்கு போன் செய்கிறார்.

கோபி போனை எடுக்க மயூரா அழுது கொண்டே இருக்கிறார். மயூ ஏன் அழுகிறாய் என கேட்க, அம்மாவிற்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என சொல்கிறார். இதை யார் சொன்னார் என கேட்க, ஒரு அங்கிள் போன் செய்தார் என சொல்கிறார். எழில் வீட்டிற்கு வர பாக்கியா எங்கே என கேட்கிறார். அக்கா மேலே கிளம்பிக் கொண்டிருக்கார் ஜெனி மேக்கப் போடுகிறார் என சொல்கிறார். பாக்கியா கிளம்பி வர எழில் அம்மாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். செம அழகாக இருக்க என எழில் மற்றும் செல்வி சொல்ல, எழில் அவர் போனில் போட்டோ எடுத்துக் கொள்கிறார். ஜெனி எனக்கும் இதே போல மேக்கப் போடு என சொல்கிறார்.

வடிவுக்கரசியை ஏற்பாடு செய்த சௌந்தர்யா, லட்சுமியிடம் அம்மா பெயரை கேட்ட ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

இனியா கப்புடன் வர அம்மா அம்மா என்று கத்தி கொண்டே இருக்கிறார். அப்போது என்ன அம்மா எதாவது கல்யாணத்திற்கு போறியா என கேட்க அம்மாவை பேப்பரில் இருந்து பேட்டி எடுக்க வருகிறார் என சொல்கிறார். இனியா இது என்ன கப் என கேட்க நீ எழுதிய கட்டுரை போட்டிக்கு எனக்கு பரிசு கிடைத்திருக்கு என சொல்கிறார். என்ன அம்மா எல்லா இடத்திலும் கலக்கி இருக்கிறாய் என சொல்கிறார்,. நான் குறிப்பு தான் சொன்னேன் அவளாக தான் எழுதி இருக்கிறாள் என கேட்கிறார். பின் மயூரா அழுது கொண்டிருக்க கோபி வந்து போன் செய்து இருக்கிறார். கோபி மயூராவை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல, பாக்கியா பேட்டி கொடுக்க தயாராகுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!