புது பிசினஸிற்கு பெயர் பலகை மாட்டும் பாக்கியா, குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து முடிவு செய்த செழியன், ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” சீரியல்!!
விஜய் டிவி “பாக்கியாலட்சுமி” சீரியலில், பாக்கியா ஆரம்பிக்கும் புதிய பிசினஸ் பெயர் குறித்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கோபி ராதிகாவிடம் தனது குடும்பம் பற்றி தவறாக பேசி அவரது மனதை மாற்றுகிறார். செழியனும், ஜெனியும் குழந்தை பெற்றுக் கொள்ளவது குறித்து முடிவு செய்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவின் புதிய சமையல் வியாபாரத்திற்கு பெயர் முடிவு செய்கின்றனர். அப்போது ஈஸ்வரி சாப்பாடு என்று தான் வைக்கணும் என்று முடிவு செய்கின்றனர். எழில் பிசினஸ் தொடங்க புதிய போர்டு செய்து வருகிறார். அதை வீட்டு வாசலில் மாட்டி தனது அம்மாவுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.
கோபி, ராதிகாவும் காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி மயூரா குறித்து கேட்கிறார். எனக்கும் வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் இல்லை நான் என் பெண்ணுக்காக தான் வாழுறேன் என்று கோபி பொய் சொல்கிறார். அப்போது ராதிகாவின் கையை பிடிக்க ராதிகாவிற்கு ஒரு மாதிரி இருக்கிறது. பின்னர் கோபியை பற்றி ராதிகா மனதிலும் இரக்கம் வருகிறது.
செழியனும் ஜெனியும் தனியாக பேச குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்று ஜெனி கேட்கிறார். இப்போதைக்கு வேண்டாம் சின்ன சின்ன ஆசைகள் எனக்கு இருக்கு அதெல்லாம் முடித்துவிட்டு பிறகு பெற்றுக் கொள்ளலாம் என செழியன் சமாதானம் சொல்கிறார். ஜெனியும் அதனை ஏற்றுக் கொள்கிறார். பிறகு எழில் அமிர்தா வீட்டிற்கு செல்ல அமிர்தா போனை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். நானும் கணேஷ் சேர்ந்து வீடியோ எடுத்தோம் அதை பார்த்து சிரித்தேன் என்று சொல்ல நிறைய திறமைகள் உங்களுக்குள் இருக்கு என்று சொல்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!