ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு ” GOOD NEWS “..!! விமான போக்குவரத்து துறை அறிவிப்பு..!!
கேரள மாநிலத்தில், பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். மேலும், அந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மகர பூஜை மற்றும் மண்டல விளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததால் , அத்தகைய விழாக்காலங்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்று பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக விமானத்தில் கூடுதல் கட்டணமின்றி ஜனவரி 20, 2025 வரை பக்தர்கள் விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!
























