இந்திய பயணிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை – ஆஸ்திரேலியா அரசு எச்சரிக்கை!!
கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் பயணிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறை தண்டனை:
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதி தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தவிர தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மரணத்தை சந்திக்கின்றனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய விமான சேவைகளுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இங்கிலாந்து, கனடா, ஐக்கிய அரபு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்தது.
TN Job “FB Group” Join Now
தவிர ஆஸ்திரேலியா அரசும் இந்தியாவுடனான நேரடி விமான சேவையை ரத்து செய்தது. இருந்தாலும் இந்திய பயணிகள் பலர் வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாட வந்த ஆஸ்திரேலிய வீரர்களான ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் இந்தியாவிலிருந்து நேரடியாக செல்லாமல், வேறு நாடுகளின் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பியதாக தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு? வணிகர் சங்கம் ஆதரவு!
இதனால் சொந்த நாட்டு மக்களே ஆஸ்திரேலியா வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா மக்கள் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 66 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் மே மாதம் 3ஆம் தேதி இந்த நடைமுறை அமலுக்கு வரும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.