தமிழகத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு? வணிகர் சங்கம் ஆதரவு!

0
தமிழகத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு? வணிகர் சங்கம் ஆதரவு!
தமிழகத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு? வணிகர் சங்கம் ஆதரவு!
தமிழகத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு? வணிகர் சங்கம் ஆதரவு!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக 15 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்தால் நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாநிலம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு முறை தமிழகத்தில் அமலில் உள்ளது.

மே 8 வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. முழு ஊரடங்கின் மூலம் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் பொதுமக்களின் அன்றாட வாழ்வு பெருமளவில் பாதித்தது. முழு ஊரடங்கினால் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் தினக்கூலிகள் மற்றும் சிறு, குறு வணிகர்கள் பொருளாதாரத்தை இழந்து வாடி வந்தனர். இதனால் தான் இம்முறை அரசு முழு ஊரடங்கை பிறப்பிக்கமால் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா அவர்கள் 15 நாட்கள் முழு ஊரடங்கை அரசு பிறப்பித்தால் எங்கள் சார்பில் இருந்து முழு ஒத்துழைப்பு தருவோம் என்று கூறியுள்ளார். ஆனால் இதனால் பாதிக்கப்படக்கூடிய வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை அரசே வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!