திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆகஸ்ட் மாத டிக்கெட் இன்று வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் இன்று முதல் தொடங்கி உள்ளது. அதன்படி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்கள் ஆன்லைன் குலுக்கல் முறையில் பின்னர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசன டிக்கெட்:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. அதனால் சுவாமிக்கு தினசரி பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன் பிறகு அரசின் முயற்சியால் ஓரளவு கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் முன்பதிவு அடிப்படையில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கோவில் இணையதளம் வாயிலாக மாதந்தோறும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – தவணைத்தொகை கிடைக்குமா? எப்படி சரிபார்ப்பது!
அதன்படி முதலில் ஆகஸ்ட் மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி உள்ளது. இதனையடுத்து கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, தோல் உற்சவம் ஆகிய கட்டண சேவைகளில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு வீட்டில் இருந்தபடியே தரிசிக்க விரும்பும் பக்தர்கள் நாளை (மே 25) முதல் தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தற்போது இலவச தரிசன டிக்கெட் திருப்பதி தேவஸ்தானத்தில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நன்றாகவே குறைந்துள்ளது. அதனால் கட்டுப்பாடுகளை முழுமையாக அரசு தளர்த்தி விட்டது. இதன் விளைவாக திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. எனவே பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.