PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – தவணைத்தொகை கிடைக்குமா? எப்படி சரிபார்ப்பது!

0
PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு - தவணைத்தொகை கிடைக்குமா? எப்படி சரிபார்ப்பது!
PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு - தவணைத்தொகை கிடைக்குமா? எப்படி சரிபார்ப்பது!
PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – தவணைத்தொகை கிடைக்குமா? எப்படி சரிபார்ப்பது!

பிரதமர் கிசான் யோஜனாவின் 11வது தவணைக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி 11வது தவணைத்தொகை மே 31 அன்று விவசாயிகளின் கணக்கில் மாற்றப்படும். அத்தகைய சூழ்நிலையில் இந்த முறை உங்கள் கணக்கில் தவணை பணம் வருமா? இல்லையா? என்பதை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

11வது தவணைத்தொகை:

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம், 2019 இல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாயி குடும்பங்களுக்கும் விவசாய நிலத்துடன் வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகை மூன்று சம தவணைகளாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படும். இதுவரை 10 தவணைத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 11-வது தவணை தொகைக்காக விவாசகிகள் காத்துக்கொண்டு உள்ளனர்.

அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியல்!

இந்நிலையில் 11வது தவணையை மே 31ம் தேதி பிரதமர் மோடி வெளியிடுவார் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் PM கிசான் நிதியின் பயனாளிகளுக்கு முக்கியமான செய்தி என்னவென்றால், 11வது தவணைக்கு முன் e-KYC செய்ய வேண்டியது அவசியம். e-KYC இல்லாமல் 2000 ரூபாய் கிடைக்காது. எனவே இ-கேஒய்சி பணிகளை குறித்த நேரத்தில் முடித்த விவசாயிகளின் கணக்கில் மட்டுமே இந்தத் தொகை வரும். e-KYC செயல்முறையை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என்ற 2 வகைகளிலும் செய்யலாம்.

PM கிசான் 2022 பட்டியலை சரிபார்க்கும் முறை:
  • முதலில், நீங்கள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில் ‘ஃபார்மர்ஸ் கார்னர்‘ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பின்னர் பயனாளிகள் பட்டியல் இணைப்பை கிளிக் செய்யவும்.
Exams Daily Mobile App Download

  • இப்போது உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத் தகவல்களை இங்கே உள்ளிட வேண்டும்.
  • கடைசியாக, ‘Get Report’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அங்கே முன்னால் ஒரு பட்டியல் இருக்கும், அதில் உங்கள் பெயரைக் காணலாம்.
  • அந்த பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், PM கிசான் நிதியின் ரூ 2000 உங்கள் கணக்கில் வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!