தமிழகத்தின் குறிப்பிட்ட ‘இந்த’ மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக ஆகஸ்ட் 13ம் தேதி பணி நாளாக செயல்படுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த கொடிய நோயினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருவது அனைத்து மக்களுக்கும் பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் அரசின் சரியான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தொற்றினை கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் பிறகு மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினர்.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்தன. பிறகு நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் கோயில்களில் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மக்கள் அதிகம் கலந்து கொள்ளும் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது மக்கள் கொரோனா பரவலில் இருந்து மீண்டு வரும் நிலையில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மாநில அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை – ஆகஸ்ட் 17 முதல் அமல்!
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் 1 ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 1ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 13ம் தேதி பணி நாளாக செயல்படுத்தப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.