மாநில அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை – ஆகஸ்ட் 17 முதல் அமல்!
நாடு முழுவதுமே தற்போது வரைக்கும் தனியார் நிறுவனங்கள் சார்பில் மட்டுமே ஆன்லைன் டாக்சி சேவைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், முதன் முறையாக மாநில அரசு இ டாக்சி சேவைகளை தொடங்கவுள்ளது.
டாக்சி சேவை:
நாடு முழுவதும் ஓலா, ஊபர் உள்ளிட்ட அனைத்து தனியார் கால் டாக்சி நிறுவனங்களும் குறைவான விலையில் நிறைவான ஆன்லைன் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனால், தற்போது வரைக்கும் தனியார் நிறுவனங்கள் சார்பில் மட்டுமே ஆன்லைன் டாக்சி சேவைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், முதன் முறையாக நாட்டிலேயே கேரளா மாநிலத்தில் தான் ஆன்லைன் டாக்சி சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, கேரள சவாரி என்கிற பெயரிலேயே ஆன்லைன் டாக்சி சேவைகளை தொடங்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
நாட்டிலேயே மாநில அரசு ஆன்லைன் மூலமாக டாக்சி சேவைகளை தொடங்கியது என்றால் இதுவே முதல் முறையாகும். அதாவது, இந்த் கேரளா சவாரி என்கிற ஆன்லைன் டாக்சி சேவைகளை வரும் ஆகஸ்ட் மாதத்தில் அமல்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு, எந்தவித இடையூறும் இல்லாத வகையில் சர்ச்சைகளற்ற பயணத்திற்காக தான் இத்தகைய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரள அரசின் ஆன்லைன் – டாக்சி முன்னோடி திட்டமானது மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 17-ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி!
மேலும், மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன்குட்டி தற்போது இந்த ஆன்லைன் வழியான டாக்சி சேவைகளை மாநில அரசே ஏற்று நடத்துவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார். மேலும், தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ள ஆட்டோ மற்றும் டாக்சி தொழிலார்களுக்கு இந்த புதிய திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும், பொதுமக்கள் அனைவரும் இந்த டாக்சி சேவைகள் மூலமாக பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.