ஆடி மாதத்தில புதுமண தம்பதிகளை பிரிச்சாச்சு – மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!
தமிழகத்தில் ஆடி மாதம் துவங்கப்பட்டுள்ள நிலையில் புதுமண தம்பதியினர் பிரிந்து இருப்பதால் நெட்டிசன்கள் அதனை நகைச்சுவையாக மீம்ஸ் போட்டு சமூக வலை பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மீம்கள் வைரல்:
தமிழகத்தில் காலம் காலமாக ஆடி மாதம் துவங்கியவுடன் புதுமண தம்பதியினரை பிரிக்கும் வகையில் மணப்பெண்ணை அவரது அம்மா வீட்டிற்கே அனுப்பி விடுவது வழக்கமாக இருக்கிறது. அதாவது, ஆடி மாதத்தில் புதுமண தம்பதியினர் ஒன்று சேர்ந்தால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் என்பதனால் அவர்களை பிரிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் கலாச்சாரங்கள் பலவும் மாறிவிட்ட நிலையிலும் தற்போது வரை ஆடி மாதத்தில் தம்பதியினர் பிரிந்து இருப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தற்போது ஆடி மாதம் துவங்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக திருமணம் முடிந்த தம்பதியினரை வைத்து புது மாப்பிள்ளை படும் அவஸ்தை, உறவினர்களின் செயல்கள் என அனைத்தையும் சமூக வலைப்பக்கங்களில் கலாய்த்து அதிகமாக மீம்கள் பகிர்ந்து வகிக்கின்றன. அந்த மீம்களை நண்பர்கள் சேர்ந்து திருமணமான தனது நண்பர்களுடன் ஷேர் செய்து அதிக அளவில் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.