ரயில் பயணிகள் கவனத்திற்கு – வாராந்திர சிறப்பு கட்டண ரயில் நீட்டிப்பு! முழு விவரம் இதோ!
தமிழகத்தில் விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம்-நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயிலை வரும் நவம்பர் வரையில் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்வதாக மதுரை ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு கட்டண ரயில் சேவை:
இந்தியாவில் கடந்த 2 1/2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து சேவைகள் சரியாக இயங்கவில்லை. அதனால் பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய அனைத்து வித ரயில் சேவைகளும், பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட தெற்கு ரயில்வே, விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் – நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர சிறப்புக்கட்டண ரயிலை நீட்டிப்பு செய்வது தொடர்பாக மதுரை தெற்கு ரயில்வே சார்பாக ஜூலை 16 அன்று செய்திக்குறிப்பு வெளியானது.
Exams Daily Mobile App Download
அதில், ‘விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம்-நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கிடையே வாராந்திர சிறப்புக்கட்டண ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரையும் வேளாங்கண்ணி வரையில் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்புக்கட்டண ரயில் (06035) எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 13 முதல் நவம்பர் 12 வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும். இதை தொடர்ந்து வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாராந்திர சிறப்புக்கட்டண ரயில் (06036) வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 14 முதல் நவம்பர் 13 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.
தமிழகத்தில் ஜூலை 22 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த ரயில்கள் கோட்டயம், சங்கணாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் அறையுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.