தமிழகத்தில் ஜூலை 22 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு உதவி செய்யும் விதமாக வாரந்தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் வருகிற ஜூலை 22 ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் துயரை போக்குவதற்காக அரசு சார்பில் வாரந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பல தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வார்கள்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வருகிற ஜூலை 22 ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழிசார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 22 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்!
இந்த முகாமில் கலந்து கொள்ள அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சென்னையில் உள்ள 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். வாரந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நடைபெற இருக்கும் முகாமில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.