தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் தாக்கம் – அரசு நடவடிக்கை!
திருப்பூர் மாவட்டத்தில் குறுவள மைய தலைமை பள்ளிகளில் ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களிடம் இணைய வழி விளையாட்டின் தாக்கம் குறித்தும் அதிலிருந்து விடுபடுவது குறித்தும் கலந்தாலோசிக்கப் பட்டது.
இணையவழி விளையாட்டு:
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு தினசரி பாடங்கள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆன்லைன் கற்றல் கற்பித்தல் எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது அனைவருக்கும் ஒரு கேள்வி குறியாகவே இருந்து வந்தது. மேலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் கற்றல் எட்டாக்கனியாக இருந்து வந்தது. ஏனெனில் ஸ்மார்ட் போன்களை விலை கொடுத்து வாங்கி கற்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் ஆன்லைன் கற்றலை விட நேரடி கற்றல் முறை மிக சிறந்தது என்பதால் பள்ளிகளை விரைவாக திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கோரிக்கைகள் எழுந்தது
Exams Daily Mobile App Download
இதனையடுத்து நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் வழிகாட்டுதல்படி குறுவள மைய தலைமை பள்ளிகளில் ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனை கூட்டங்கள் நடந்தது. இதில் 1 முதல் 12ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கலந்தாலோசனை நடைபெற்றது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – வாராந்திர சிறப்பு கட்டண ரயில் நீட்டிப்பு! முழு விவரம் இதோ!
மேலும் 11, 12ம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு மற்றும் புவியியல், பொருளியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு பாடவாரியாக தனித்தனி வகுப்பறைகளில் ஆலோசனை நடந்தது. மேலும் இக்கூட்டத்தில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையில் உள்ள கற்றல் இடைவெளியை குறைப்பதற்குத் தேவையான பணிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அத்துடன் சமீப காலமாக மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகளின் தாக்கம் இருப்பதால் அந்த பழக்கத்திலிருந்து மாணவர்களை விடுவிப்பதற்கு அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில், இணையவழி விளையாட்டுகளின் தாக்கம் தொடர்பான கேள்விகளுக்கு ஆசிரியர்கள், தங்களது EMIS மூலம் பதில் அளித்தனர்.